கொழும்பில் இருந்து யாழ் வந்த ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தி பகுதியில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரம் பல இலட்சம் ரூபா உதவி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரம் பல இலட்சம் ரூபா உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இவ்வகையில் கடந்த 19/07/2023 அன்று திருகோணமலை மாவட்டம் –  செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக ஏழாவது  கட்டமாக... Read more »

யாழ். பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்னால் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (21.07.2023)  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும்... Read more »

கோட்டாபய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோட்டாவிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடு!

2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான்... Read more »

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  குருநகர் பகுதியை சேர்ந்த23 வயதுடையசந்தேக நபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த யூன்  மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த... Read more »

இன்றைய பட்டமளிப்பு விழாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி மிக்க சம்பவம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக... Read more »

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் – எம்.வி.சுப்பிரமணியம்

இந்திய இழுவை படகுகளின் வருகையும், அவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எங்களை பாரிய இன்னல்களுக்குள் தள்ளி இருக்கின்றன. இது சம்பந்தமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் நடத்தியும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்ட முடியாத சூழலிலே, அரசாங்கமும் அரச அதிபரும் இதற்கு பெரிதாக செவி... Read more »

தலைவர் சிவா 100 எனும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் எதிர் கட்சி தலைவருமான சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள்

தலைவர் சிவா 100 எனும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் எதிர் கட்சி தலைவருமான சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் விழாக்குழு தலைவர் பேராசிரியர் கு.மிகுந்தன் தலமையில் இடம் பெற்றது. ... Read more »

2023 புலமைப்பரிசில்கள் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !

இந்த வருடம் (2023) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம்... Read more »

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவு!

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதி யமே வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதா னித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம்... Read more »