யாழ். பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்னால் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (21.07.2023)  உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் இன்றையதினம் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவர் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் பொலிஸார் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தவேளை அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews