400 கிலோ எடையுள்ள மஞ்சள் மூடைகள் காக்கைதீவு பகுதியில் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் இருந்து 16 மஞ்சள் மூடைகள் இன்றையதினம் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மூடைகளில் 400 கிலோ மஞ்சள் காணப்பட்டதாக அறியப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரால் இந்த மீட்பு... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

போதனா வைத்திய சாலையில் கடந்த  சில நாட்களாக தொலைபேசி திருட்டில்  ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் கைது... Read more »

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமாகவே காணப்பட்டது – சுகாஷ் பகீர் தகவல்.

கொலை செய்யப்பட்ட சித்தங்கேணி இளைஞன் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியிலீ ஆய்வு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் சென்றிருந்தனர். இதன்போது சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்களும் கூடவே சென்றிருந்தார். இது... Read more »

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் – நாடாளுமன்றத்தில் சித்தார்த்தன் எம்.பி தெரிவிப்பு

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் சித்தார்த்தன் எம்.பி  கடந்த 22.11.2023 அன்று தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக்... Read more »

லயன்ஸ் கழகத்தினால் பொலிஸாருக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு….!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் கண்பார்வை குறைபாடுடைய பொலிசாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின்... Read more »

வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து சற்று முன் கைது…! 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலானா குழுவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவருக்கு திறந்த பிடியானை... Read more »

தாவடியில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார். இது குறித்து சிறுவனின்... Read more »

பொலிஸ் எனக்கூறி கடையில் பணம் கொள்ளை!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் 23 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கடைக்குள் நுழைந்த... Read more »

யாழ் நகரில் கேக் வெட்டிய வன்முறை கும்பலை கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!

கடந்த வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் அடங்கிய குழு ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் கடந்த 5... Read more »