வவுனியா – ஓமந்தையில் இன்று காலை விபத்து ஒருவர் பலி!

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருநபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கப்ரக... Read more »

சிங்கள தேசத்தின் சிந்தனை தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனவே தமிழ் கட்சிகள் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் இல்லையேல் தமிழரை காப்பாற்ற முடியாது – நா. உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

சிங்கள தேசத்தில் இருப்பவர்களுடைய மூளை எல்லாம் தமிழர்களை ஒழித்துகட்ட வேண்டும் என செயற்படுகின்றனர். எனவே தமிழ் இனத்துக்காக செயற்படுகின்ற கட்சிகள் புலம் பெயர்ந்த உறவுகளின்; அமைப்புக்கள் ஒன்றாக பலமாக இருக்க ஒரு குடையின் கீழ் அணிதிரளவேண்டும் இல்லை என்றால் மக்களையும் தேசத்தையம் காப்பாற்ற முடியாது... Read more »

ஆனைக்கோட்டையில் கிறிஸ்தவ திருச் சொரூபங்கள் உடைத்தமைக்கு அங்கஜன் எம்.பி கண்டனம்!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை வீடுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ திருச்சொரூபங்கள் மீது 28.07.2023 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது உத்தியோகபூர்வ சமூக... Read more »

புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் கையளிப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் இன்று பாடசாலை சமூகத்திற்கு கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.   பழைய மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் நிதி... Read more »

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட கணனி ஆய்வுகூடம் திறந்த வைப்பு!

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கல்விபயிலும் தாதிய மாணவர்களுக்கு, தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்பம் ஒரு பாடமாக இருந்த போதிலும்  அவர்களுக்கான கணினி ஆய்வுக்கூடம் ஒன்று இப் பாடசாலையில்  இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையை நிவர்த்தி செய்யுமுகமாக  அவர்களுக்கான இணைய வசதியுடன்  கூடிய நவீன கணனி ஆய்வுகூடம்... Read more »

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா!

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்று 28/07/2023  இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு  ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்... Read more »

உலகின் உயரமான BUNGEE JUMPING விளையாட்டு இலங்கையில்!

தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த் சமரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம்... Read more »

இலங்கை வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியுடன், அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி... Read more »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளர்கள்,... Read more »

கடற்கரையில் கரையொதுங்கிய குழந்தையின் சடலம்!

களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »