மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும்... Read more »

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த நபரின் மகன் நேற்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக... Read more »

சவூதியில் உயிரிழந்த இலங்கை பெண்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26... Read more »

மகிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி... Read more »

ஜனாதிபதியை சந்தித்த சுசூகி

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »

VAT வரி அதிகரிப்பால் கசிப்பு விலையும் உயர்ந்ததால் திண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்

VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளதால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் – கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டவிரோத செயற்பாடுகளை... Read more »

Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களின் கந்தன் மகிமை எனும் தலைப்பில் நாளை சந்நிதியில் அருளுரை…!

ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். Read more »

யாழ் இளைஞன் லண்டனில் குத்திக் கொலை

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது... Read more »

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்... Read more »

விவசாயத்திற்கு “ட்ரோன்“ வழங்க திட்டம்

நெற்செய்கைக்கு, ட்ரோன் விநி​யோக வேலைத்திட்டம் இந்த வருடம் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ட்ரோன் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை விவசாய துறை மெரிட் கவுன்சில் ஆரம்பித்துள்ளதுடன், இதன் முதற்கட்டமாக... Read more »