சடலங்கள் மீது அரசியல் செய்ய வேண்டாம்! பேராயரை எச்சரித்த தேரர்

ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கர்தினாலும், அருட்தந்தை சிறில் காமினியும் அரசாங்கத்தையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் சர்வதேசத்தை நாடப்போவதாகவும் கூறினார்கள். எமக்கு இந்த நேரத்தில் சில காரணங்களை தெரிவிக்க வேண்டியுள்ளது... Read more »

மேலும் 175 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 10,864 கொவிட் மரணங்கள் |

– 96 ஆண்கள், 79 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 139 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 175 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்….!வீ.ஆனந்தசங்கரி

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு... Read more »

பிரமந்தனாறு குளத்தின் நீரேந்தும் பகுதிகள் வனவளத் திணைக்களத்தின் வசம்….!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் உட்பட்ட பிரமந்தனாறு குளமானது... Read more »

பிரான்ஸ், ஜேர்மன், சுவிட்சர்லாந்திற்கு பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமனம் –

பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும், வரலாற்றில் முதன் முறையாகவும் பிரான்ஸ், ஜேரமன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலைமையில் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. பனை... Read more »

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் 09.09.1990 ஆம் ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள், மேலும்... Read more »

எதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்பட கூடும்! – எச்சரிக்கை.

இந்திய – அவுஸ்திரேலிய தட்டில் உள்ள மாறுபாடு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் சிறிய நிலநடுக்கங்களை புவியியலாளர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இதுவரை ஏற்பட்ட... Read more »

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து:சம்பவ இடத்தில் ஒருவர் பலி!

தனமல்வில ஹம்பெகமுவ வீதியின் ஹெந்தகோண பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக... Read more »

வவுனியா – சாந்தசோலை கிராமம் அபாய கட்டத்தில்!

வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனாத் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனாத் தொற்று அபாயம் இருக்கின்றது எனக் கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு... Read more »

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா... Read more »