யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 05 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04 பேருக்கும்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 02 பேருக்கும், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று.

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 04 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 05 பேருக்கும்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 08 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேருக்கும்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், பலாலி விமானப்படை முகாமில் ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews