யாழ்.உடுப்பிட்டியில் குழு சண்டை ஊர் சண்டையாக மாறியது..! இராணுவத்தை அழைத்த பொலிஸார், இராணுவ குவிப்பால் பதற்றம்.. |

யாழ்.உடுப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாக மாறிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக படையினர் கிராமத்தை சுற்றிவளைத்து அமைதியை கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

உடுப்பிட்டி பிரதேசத்தில் இலகடி – வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்த தோட்டம் பகுதிகளை சேர்ந்த சண்டியர்களுக்கிடையில் தர்க்கம் உருவாகியுள்ளது. இது பின்னர் ஊர் சண்டையாக மாறிய நிலையில் குறித்த கிராமங்களில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மோதல் கடந்த சில நாட்களாக நீடித்துவருவதுடன், சண்டியர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews