அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி?

யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த பத்திரத்தினை சமர்பிக்கும் போதே தமது கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்திருக்க முடியும் எனவும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இது பற்றி பேசுவது தவறு எனவும்... Read more »

ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரை சென்றடைந்த ஜனாதிபதி.

கோப் 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக – ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை நேற்று (30.10.2021)பிற்பகல் ஜனாதிபதி சென்றடைந்தார். ஜனாதிபதியும் அவரது குழுவினரும், ஐரோப்பிய நேரம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு, கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டத்தரணிகளால் மூன்று சட்டநூல்கள் வெளியீடு.

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு,திருமதி ஜெகநாதன் சுபராஜினி ஆகியோரால் மூன்று சட்ட நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தலைமையில் இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சட்ட நூல்கள் வெளியீடும் நிகழ்வு இடம்பெற்றது. சிரேஸ்ட சட்டத்தரணி... Read more »

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொறுத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர். ஒரே நாடு ஒரே... Read more »

ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் : திகதி வெளியானது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும்... Read more »

ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலாளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று காலை (30) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு... Read more »

யாழ் பல்கலையில் 6 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகபதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத் தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது. அதன் படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி... Read more »

தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதில் தமிழக மீனவர்களுக்கும் பொறுப்புண்டு. (சி.அ.யோதிலிங்கம்.)

இழுவைப்படகுகளுக்கு தடைகோரும் சுமந்திரனின் “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறைவரை”(m2P) போராட்டம் தாயகத்திலும் தமிழகத்திலும் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் மேற்கூறிய கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக... Read more »

மிகமோசமான இனவாதி தலைமையில் ஒரு செயலணி..!சுரேஷ் பிரேமசந்திரன்.

இந்த நாட்டிலுள்ள மிக மோசமான இனவாதியை கொண்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று சொல்லுமாறு சொன்னால் தமிழ், முஸ்லிம் மக்களை இந்த நாட்டிலிருந்தே விரட்டியடிப்பது, அவர்களுக்கு எதுவுமே செய்யாமல் விடுவதுமே நோக்கமாகும். மேற்கண்டவாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்... Read more »

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது பாலியல் பலாத்காரம்! 17 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்த நீதிமன்றம்.. |

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான குற்றவாளிக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்ச ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை... Read more »