பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாராட்டு…!

2020ம் ஆண்டு நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 6 ஏசித்திகளையும் 2சி சித்திகளையும் 1எஸ் சித்தியினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவனையும் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களையும் பாராட்டி... Read more »

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு….!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழ விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் விற்பனைக்கு அதிக கிராக்கி கிடைத்துள்ளதுடன் 150 ரூபாய்... Read more »

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்த சம்பவத்துக்கு ஐக்கிய மகளிர் சக்தி கண்டனம்…!

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்து அவரை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்துக்கு, ஐக்கிய மகளிர் சக்தி கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, ஐக்கிய... Read more »

நாட்டில் மழை பெய்யும்வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும!

நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாளை (8) முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு... Read more »

இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு: காகிதப் பணிகள் ஸ்தம்பிதம்….!

டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேவேளை, காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சில காகிதப்பணிகள்... Read more »

கிளிநொச்சியில் 7 வருடங்களை கடந்தும் இடமாற்றம் செய்யப்படாத அதிபர்கள் – கவலை தெரிவிக்கும் கல்விச் சமூகம்…..!

கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில்  உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களை கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் என பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல... Read more »

பேரூந்து ஒன்றின் பின்னால் சென்றவர் பேரூந்துடன் மோதி விபத்து…..!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் சென்றவர் பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழநோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பேரூந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் பளை வைத்தியசாலைக்கு... Read more »

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு………!

தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீஸ் அணி தலைவிகௌசலா ஜெயக்காந்தராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த... Read more »

நேட்டோவை சாடிய யுக்ரேன் அதிபர்…!

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் “விமானங்கள் பறக்கத் தடை” என்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.அதில், “நாங்கள் மக்கள். எங்களைப் பாதுகாப்பது உங்கள் மனிதாபிமானக் கடமையாகும். அது உங்களால் முடியும்,” என்று கூறினார்.மேலும், “நீங்கள் அதைச்... Read more »

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை….!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை... Read more »