இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு: காகிதப் பணிகள் ஸ்தம்பிதம்….!

டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேவேளை, காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சில காகிதப்பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் இருந்த ஒரு மூட்டை புகைப்பட பிரதி காகிதங்கள் தற்போது 1,200 முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin