மண்முனை தென் எருவில் பற்று கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு….!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் பற்றிமா வீதி 12 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய தலைவர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin