நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன . Read more »
நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் சற்றுமுன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பலையினையே இங்கு காண்கிறீர்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
தமது யோசனைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு Read more »
உக்ரைனின் மரியுபோல் பகுதியில் இன்று ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை மீட்கும் நம்பிக்கை இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் இன்மை மற்றும் உணவு மற்றும்... Read more »
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை “துரோகிகள்” என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். “எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை” ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பொலிஸாரினால் தமது கடமைகளை செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஏனைய பல்வேறு அரசாங்க நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகள், பிரதேச... Read more »
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது... Read more »
ஜனாதிபதி இல்லத்துக்கு அண்மையாக இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினருக்கு சொந்தமான இரு பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்றையதினம் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு முழுவதும் பரவிய இந்தப் போராட்டத்தில் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும் போராட்டம்... Read more »
மிரிஹானவில் நடந்த விசேட அதிரடிப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என்று சற்று முன்னர் கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்கு பேர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள்... Read more »
இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்றையதினம், ஏ, பி, சி, டி, ஈ, எவ் வலயங்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையும், காலை... Read more »