இலங்கையில் கலப்படமான எரிபொருள் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை.

எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட... Read more »

அவசரமாக கூடிய விசேட அமைச்சரவை கூட்டம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் –

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நேற்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்... Read more »

அலையென திரண்ட மக்கள் கூட்டம்: விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த  29 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள்,... Read more »

அவசரகால நிலையை பிரகடனம் செய்த ஜனாதிபதி – கனடா கடும் கண்டனம்.

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது நாட்டின்... Read more »

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் – நாமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல்.

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசியிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், போதிய வருமானம் இன்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர்... Read more »

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில்  பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்... Read more »

மீண்டும் பதவியை இராஜினாமா செய்தார் சியம்பலாபிட்டிய….!

நேற்றைய தினம்  பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து... Read more »

விசுவமடு பகுதியிலும் மக்கள் போராட்டம்….!

மக்கள் விடுதலை முன்னணியினரின்  ஏற்ப்பாட்டில் இன்றைய தினம் விசுவமடு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, எல்லை பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட  இணைப்பாளர் மோகன் தலைமையில்... Read more »

கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்தித்த  வடக்கு ஆளுநர் ஜீவன்….!

இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கர்நாடக மாநில  தொழில்நுட்பம், உயர்கல்வி, அறிவியல் மற்றும் கர்நாடகாவின் தொழில்நுட்பம் டாக்டர் சிஎன் அஷ்வத் நாராயணை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.  வடமாகாணத்தை மையமாக கொண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைக்கு கொண்டு வருவது... Read more »

தீவகத்தில் கால்பதிக்க தயாராகும் இந்தியா.. மீள் புதுப்பிக்கத்தகு சக்கித் திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் இந்திய அதிகாரிகள் களம் விஜயம்….!

தீவகத்தில்  ஆரம்பிக்கபடவுள்ள மீள்புதுப்பிக்கதகு சக்தி திட்டத்தை யாழ் இந்திய  துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் உட்பட்ட தூதரக அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டனர் யாழ் தீவகப் பகுதிகளான நெடுந்தீவு,அனலைதீவு,நயினாதீவு பகுதிகளில் ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட இருந்த  மீள்புதுப்பிக்கதகு சக்தித் திட்டத்தினை இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக... Read more »