கடல்வழியாக இந்தியா செல்வதற்கு முயற்சி..! யாழ்.குருநகரை சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் கைது… |

கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 5 பேரும்,  மடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், யாழ்.குருநகரைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் படையினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews