மட்டு. நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் வீதி சோதனைகளை முன்னெடுப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் மாவட்டம் முற்றாக செயழிலந்த நிலையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெறிசோடிய நிலையில்... Read more »

களுவாஞ்சிகுடி பெரமுன கட்சியின் பட்டிருப்பு தொகுதிக் காரியாலயத்தில் பதாகைகள் எரியூட்டல்.

நாடாளவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் இன்று மாலை உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீ... Read more »

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு.

பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய... Read more »

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி!

வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறும் அமைதியாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவின் ஊடாகவே அவர் இந்த செய்தியினை வௌியிட்டுள்ளார். Read more »

வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம், குடும்ப தகராறே கொலைக்கு காரணம் என சந்தேகம்…..?

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு  வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப் பட்டுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் குறித்த  இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளதாகவும் நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள்... Read more »

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள்... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை காணவில்லை! 

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட... Read more »

யாழில் கோட்டபய அரசுக்கு ஆதரவு வழங்கிய எம் பி களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு!

யாழ்ப்பாணத்தில்அரசு ஆதரவு எம்பிக்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. நாடு பூராகவும் அரசு ஆதரவு எம்பிக்களின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசு ஆதரவுஎம் பிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் எம்பிக்களின்... Read more »

சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் மாயம்!

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம் பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த... Read more »

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில் தற்போது நிலவும் முரண்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில்... Read more »