களுவாஞ்சிகுடி பெரமுன கட்சியின் பட்டிருப்பு தொகுதிக் காரியாலயத்தில் பதாகைகள் எரியூட்டல்.

நாடாளவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் இன்று மாலை உடைத்து எரியூட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயம் ஒன்று களுவாஞ்சிகுடியில் தனியார் வீடு ஒன்றில் வாடகைக்குப் பெறப்பட்டு செயற்பட்டுள்ளது

இந் நிலையில் இன்றைய தினம் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ,பஸில் ராஜபக்ஸ, உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் மக்களால் உடைத்து
எரியூட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews