
நாடு பூராகவும் அரசு ஆதரவு எம்பிக்களின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசு ஆதரவுஎம் பிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் எம்பிக்களின் அலுவலகங்களுக்கு அருகில் பொலிசார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்