சிறுமி கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்.

பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான 29 வயதான... Read more »

புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிக்க நடவடிக்கை.

புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்கள பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதற்கமைய 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி... Read more »

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு உயர்வு.

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். முட்டை விலை 38 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,150 ரூபாயிலிருந்து 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... Read more »

மட்டு.காத்தான்குடியில் இரண்டாவது அரை இறுதி உதைபந்தாட்ட போட்டி.

மட்டக்களப்பு காத்தான்குடி விக்டரி விளையாட்டு மைதானத்தில் மர்ஹூம் என்.ரி.பாறூக் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்றிரவு இடம் பெற்றது. ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும் காத்தான்குடி சண்ரைஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையில் இடம் பெற்ற இப்போட்டியில்... Read more »

சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்:தயா கமகே

மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்று மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று... Read more »

திருக்கோவிலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்க உறவுகள் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் ஆங்கில மொழிகளில்... Read more »

கல்முனை, இஸ்லாமபாத்தில் 16 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் சிறுமியைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலியல்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்... Read more »

ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளில் வாழ்வாதார நிதியுதவி வழங்கல்

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அரசினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளின் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கப்பட்ட நிவாரண... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்வாதார நிதியுதவி வழங்கல்.

நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வாழ்வாதார மானிய உதவிப் பணம் இன்று வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் முகாமையாளர் திருமதி நிஷாந்தி தயானந்தன் தலைமையில் தம்பிலுவில் சமூர்த்தி... Read more »

காரைதீவில் பாதிக்கபட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேச மக்களுக்கு காரைதீவு 24ஆம் படையனியின் ஏற்பாட்டில் இன்று பாதிக்கபட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் நிறுவனத்தின் அனுசரனையில் இன்று காரைதீவு பிரதேச செயலகத்திங்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்... Read more »