சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்தவகையில் இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள்... Read more »

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று  இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதாவது வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (23) மாலை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்  அறிக்கையிலே இவ்வாறு   முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுமாறு... Read more »

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் செயலாளாராக கோவிந்தன் கருணாகரம்(ஜனா),தேசிய... Read more »

போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் சிக்கினார்..!!

கொழும்பில்  சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொடை – பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு... Read more »

மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் – செல்வம் எம்பி ..!!

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை... Read more »

மட்டு பன்குடாவெளி வீடு ஒன்று காட்டு யானையால் சேதம்!

மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது. மட்டக்களப்பு செங்கலடி பிரதேச... Read more »

கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டுமானங்கள்

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை ஆவணப்படுத்தி குறித்த கட்டுமானங்களை  அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும்…!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளாகத்தில் இன்றையதினம்(23)  ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

வெடுக்குநாறி மலையில் பக்தர்களுக்கு இடையூறு…! அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்…!மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பு வலியுறுத்து…!

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் மௌலவி B.A.S சுப்யான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(23) வெளியிட்டுள்ள ஊடக... Read more »

மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள்…!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார்... Read more »