நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று  இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதாவது வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (23) மாலை வெளியிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின்  அறிக்கையிலே இவ்வாறு   முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் அதில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி,  மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே,  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews