சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விமான நிலையத்தில் கைது..!

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று கைது  செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்... Read more »

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கால் கோள் விழா

தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று 22/02/2024 காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப் என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of... Read more »

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்-30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது... Read more »

சமூர்த்தி உத்தியோகத்தருக்கு கெருடாவில் சேவை நலன் பாராட்டு விழா

நேற்று  (21) மாலை 04.00மணியளவில் வடமராட்சி கெருடாவில் அமைந்துள்ள அம்பிகை முன்பள்ளி மண்டபத்தில்  கிராம முன்னாள் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடலில் பரபரப்பு-சம்பவ இடத்தில் வெற்றிலைக்கேணி கடற்படை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று காலை 22.02.2024 கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர். எனினும் இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது... Read more »

இன்றைய இராசி பலன் 22.02.2024

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ராசிபலன் 22-02-2024 வியாழன் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 மேஷம் 🐐 உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். உங்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை இன்று முடிக்க... Read more »

உதவும் கரங்கள் வடகிழக்கு   அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு கடந்த 29-01-2024 அன்று Lift Ngo தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.... Read more »

கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் – 2024

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் நாளை (22.02.2024 வியாழன்) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 08.03.2024 (வெள்ளி) ம் திகதி சிவராத்திரி தினத்தன்று தேர்த் திருவிழாவும் , மறுநாள் 09.03.2024 (சனி ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதேவேளை இம்முறை... Read more »

பிரான்சின் அடையாளமாக கருதப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளது

பிரான்சின் அடையாளமாக கருதப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈபிள் கோபுரத்தின் ஊழியர்கள் நினைவுச்சின்னத்தை நிதி ரீதியாக நிர்வகிக்கும் விதத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈபிள்... Read more »

இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதையும் தடுக்க முடியாது” மீனவர்கள் எச்சரிக்கை

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு... Read more »