தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு நேராக, 90° கோணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட... Read more »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தடை உத்தரவு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான... Read more »

சாந்தனை நிரபராதி என ஒப்புக்கொண்ட நீதிபதி: இந்தியா மீது குற்றச்சாட்டும் புகழேந்தி…!

 ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் சாந்தன் தரப்பினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போதும் அது நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சாந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்நீத்த... Read more »

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இவர்கள் இனம்... Read more »

தலைவரின் வீடு தேடிச் சென்ற சாந்தன்…!

சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி சற்றுமுன் வல்வெட்டித்துறையை சென்றடைந்ததுடன், அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த  வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி விருகின்றனர் இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி... Read more »

சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பொறுப்புக் கூற வேண்டும்…! தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்து…!

இந்திய மத்திய,மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயலே சாந்தனின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதுடன் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. போராளி சாந்தனுக்கு புகழ் வணக்கம்... Read more »

இந்திய இழுவைமடி படகுகள் யாழில் அட்டகாசம்…!

இந்திய இழுவைமடிப் படகுகளால் யாழில்  கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம்(02)  இரவு வேளை  அத்துமீறி உள்நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடி படகுகளால் யாழ் வலிகாமம் மேற்கு,  சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில்... Read more »

பெண்ணிடம் சில்மிஷம்; பாடசாலை அதிபர் கைது..!

பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல பொலிஸார் சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய... Read more »

சற்றுமுன் ஆரம்பமான சாந்தனின் இறுதி நிகழ்வுகள்…!

சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன் யாழ் உடுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி... Read more »

கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கால் வினாத்தாள்கள் கசிவு?

மேல்மாகாண கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாகவே, தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியானதாக உத்தியோகத்தர்கள் ஒருவருக்கொருவரை குற்றஞ்சாட்டி வருவதாக அரச ஆசிரியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெஹான் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள்... Read more »