யாழில் போதைப்பொருளுடன் கைதான மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரும் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த நகைக்கடை உரிமையாளரான கணவர்... Read more »

பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முற்பகலளவில் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழத்திற்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட... Read more »

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான ஹெரோயின் பாவனையால் இளைஞன் மரணம்!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த... Read more »

சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றம்  அழைப்பாணை…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது  செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றத்தால்  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்... Read more »

யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு

03/08/2023 இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில்  மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம்  மாத்தளை வரையான  நடைபயணத்துக்கு  ஆதரவாக பேரணி ஒன்று நடத்தப்பட்டது.  அதன் பின்னர் ஒரு அணியினர் வாகனப்பேரணியாக வவுனியா நோக்கி புறப்பட்டனர்.  பேரணியில்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்... Read more »

வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல்…! (VIDEO)

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »

அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த  உற்சவத்தின்  தேர் உற்சவம்…!(VIDEO)

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த உற்சவத்தின்  தேர் உற்சவம் கடந்த 31.07.2023 அன்றைய தினம் மிக மிக சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை  சூழ  விநாயகப் பெருமான் முன்னே செல்ல   முருகப்பெருமான் அடுத்துவர  பின்னால்  அல்வாய்  வேவிலந்தை... Read more »

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி கிளிநொச்சியை அடைந்தது…! (video)

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு... Read more »

புலோலி அறிவகத்தின் 68 வது ஆண்டில் குருதிக்கொடை….!

யாழ்ப்பாணம் வடமராட்சி  புலோலி  வட மேற்க்கு முருகன் கோவிலடி  அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம்  குருதிக் கொடை  வழங்கும்  நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.  அறிவகம் சன  சமூக நிலையத்தின் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலைமையில்... Read more »

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்….!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும்... Read more »