நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!

யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (30) நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆலய... Read more »

அன்னதான அறப்பணிகளை 30. ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மோகன் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்….!

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும்  அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும்... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பார்வையாளர்களாவதே பொருத்தம் – சரவணபவன் ஆலோசனை.

சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன – சுரேந்திரன் குருசாமி

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன. இனவாத மதவாத சக்திகள்  போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா? இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்தார். இன்றையதினம் அவர்... Read more »

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தின் ஊடக அறிக்கை…!

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முயலும் நாடுகள் தமது நாட்டில் அல்லது தமது அன்பிற்குரியவர்கள் வாழும் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்களா? இலங்கையில் 1958ம் ஆண்டில் இருந்து தமிழர் மீதான... Read more »

யாழ்ற்றன் கல்லூரி மாணவர்களுக்கு கதிர்காமநாதன் உதவி…!

அறக்கொடைச் செம்மல், திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 27.08.2023 அன்று  தான் கல்விகற்ற பாடசாலைகளான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை ஆகியவற்றிற்கு விஜயம் செய்து 490 மாணவச்செல்வங்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி... Read more »

மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா…!

யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கும்ப அபிடேக பெருவிழா எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 5.15 தொடக்கம் 6 மணிவரையான சுபவேளையில் கர்மாரம்பம் இடம்பெறவுள்ளது. மூன்றாம் திகதி காலை 8 மணிமுதல் மாலை நான்கு மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும்... Read more »

4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை…!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள்... Read more »

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி, குடத்தனையில் சம்பவம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கணவனால் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை  இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலீஸ்... Read more »

யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி

யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த கண்காட்சி இன்று(29)... Read more »