நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!

யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (30) நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஆலய குருக்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews