புலோலி கிழக்கு அ.த.க.பாடசாலைக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் உதவிகள்…!

யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார்... Read more »

மாகாண மட்டத்தில் எல்லே போட்டியில் சம்பியனான அம்பன் மெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு….!

அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான மாணவர் எல்லே அணிக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வாக சம்பியனான எல்லே அணியினர் அம்பன் குடத்தனை... Read more »

வடக்கு கிழக்கில் 19ஆம் திகதிவரை மழை வீழ்ச்சி: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சுழற்சி காற்று தோன்ற வாய்ப்பு – சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதிவரையும் கடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: வடக்கு ஆளுநரின் அறிவித்தல்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். வட மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.... Read more »

யாழில் தனிமையில் சென்ற பெண்ணை தாக்கி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில் நேற்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது. ஒரு பவுண்... Read more »

அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் யாழ்பாணத்தில்…!

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை தினமான இன்று (11)மன்னார் சமூக பொருளாதார... Read more »

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக ஒரு குடும்பம் பாதிப்பு – வீடும் சேதம்!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நேற்றையதினம் (10) ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை ஜே/415 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பம்... Read more »

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர்கைது!

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  யாழ்ப்பாணப் பிராந்திய... Read more »

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது – திருட்டு பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது  தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

தாளையடி நன்னீர் திட்டத்தின் கடல் பாதுகாப்பு கம்பங்களில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நெற்றிரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடற்றொழிலுக்காக நேற்றைய தினம்  கடலுக்கு... Read more »