யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு இலக்கம் 188 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கணேசன் ரமேஷ் குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளுடன் கடக்க முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளானவர் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பாதுகாப்பற்ற வீதியூடாக பல கிராம மக்கள் நாள் ஒன்றுக்கு பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 3000 க்கு மேற்பட்ட மக்கள் பாவனையில் உள்ள வீதியில் பல விபத்துக்கள் இடம் ஸ்ரீபெற்றதை அடுத்து மக்கள் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு வீதி போக்குவரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தரும்படி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை பலமுறை செய்திருந்தும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews