யாழில் பொலிசார் இருவரை விரட்டி விரட்டி தாக்கிய கும்பல்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு... Read more »

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள்... Read more »

மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பழக்கம் : தடுப்பதில் பெற்றோருக்கே பெரும்பொறுப்பு – பொ. ஐங்கரநேசன்

பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதைத் தடுக்கமுடியாது. மாணவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பதில் படைத்தரப்புஇ... Read more »

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு – அமைச்சின் செயலாளர் மகேசன் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில்  பொதுவான உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பது தொடர்பில் அமைச்சர் கரிசனையாகவே உள்ளது என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய நீதிமன்றத்தில்... Read more »

மக்கள் நடமாடும் பகுதிகளில் கைக்குழந்தையுடன் ஏமாற்றி திருடி வந்த சகோதரர்கள் கைது!

திருநெல்வேலி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன், ஜேர்மனில் இருந்து வந்த பெண்மணியின் கைப்பயில் இருந்த 500யூரோ பணம் இலங்கை பணம் 20000 உட்பட 1 லட்சத்து இருபதாயிரம் ரூபா பணம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பன களவு போனது. இது குறித்து அந்த பெண்ணால்... Read more »

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று திங்கட்கிழமை (29) பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார். இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர். இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள... Read more »

செம்பியன்பற்று,கட்டைக்காடு ஆலயங்களில் அன்னதான நிகழ்வு

வடமராட்சி கிழக்கில் இரு தேவாலயங்களில் நேற்று  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டு அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திலும்,கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலும் நேற்று  திருச்செபமாலையுடன் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

காலமானார் நல்லூர் மாப்பாண முதலியாரின் தாயார்..!

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும், தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அம்மா சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் இறையடிசேர்ந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள்... Read more »

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்  – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்  சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும்... Read more »

இளைஞரைக் காணவில்லை – தேடும் உறவினர்கள்

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன்  காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர்... Read more »