வெற்றிலைக்கேணியில் விபத்து-செய்தி  சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார்... Read more »

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்கு சென்ற மக்கள்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (23 ) வெள்ளிக்கிழமை ஆலய நிர்வாகத்தினர், பூசகர்களின் ஏற்பாட்டில் ஆலயத்துக்கு செல்லவுள்ளவர்களின் பெயர்கள் திரட்டி அதனை பிரதேச செயலகத்துக்கு வழங்கி... Read more »

யாழ்ப்பாணத்தில் 3 தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவம்

வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரின் இடையூறுகள், அச்சுறுத்தல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம், பலாலி, வசாவிளான் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும்... Read more »

கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூட்டை JCB,உழவு இயந்திரம் கொண்டு அகற்றிய கடற்படை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர். கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும்... Read more »

கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி ரூபா யாழ்ப்பாணத்தில் மோசடி!

.கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந் துள்ளது. இது... Read more »

யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதரக புதிய கொன்சியூலராக சாய் முரளி நியமனம்!

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலராக சாய் முரளி அடுத்தவாரம் முதல் பதவியேற்கவுள் ளார் . கொன்சியூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அவர் புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்கின்றார். இந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »

இமாலய பிரகடனத்திற்கு நிதியுதவி: சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது

இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாம் நிதியுதவி செய்ததாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கமம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (பெப்ரவரி 21) பதிலளிக்கும் போதே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இதை... Read more »

துன்னாலை தெற்கில் வாள் வெட்டு, இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள இரு இளைஞர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதே இடத்தை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19... Read more »

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால்... Read more »

காதலர் தின பரிசாக திருட்டு நகையை மனைவிக்கு பரிசளித்த கணவன்

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்... Read more »