எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!

இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள... Read more »

மருதங்கேணி கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று 17.03.2024 சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில்... Read more »

இலங்கையில் வேலையில்லாதோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், பெப்ரவரி மாதத்தில்... Read more »

வல்வெட்டித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகத்திற்கு சீல்!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகமானது நேற்றுமுன்தினம் சீல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 2024.03.15 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது அன்றைய தினமே விசாரணை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து  சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில்... Read more »

கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணை!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில்  மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி... Read more »

இன்றைய இராசி பலன் 17.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 4. 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  17 – 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.. கடற்படை செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு.

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது. வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு... Read more »

மருதங்கேணி கடலில் மீனவர் மாயம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த. கடற்தொழிலாளர் ஒருவர் இன்று 16/03/2024. அதிகாலை  கடலில் தொழிலுக்கு சென்ற  மீனவர்  இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற. தெப்பம் மட்டும்  கரையோதிங்கி உள்ளது காணமல் போனவர் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய  முத்துச்சாமி... Read more »

வடமராட்சி கிழக்கு கடலில் பரபரப்பு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியேட்டி கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று(16) காலை கரையொதுங்கியுள்ளது. குதித்த மிதவையில், “பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில்... Read more »

யாழ் பல்கலையின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதியின் மூன்றாவது நாள் அமர்வுகள் இன்று(16)  காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. கடந்த 14 ஆம் திகதி, பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு... Read more »