மருதங்கேணி கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று 17.03.2024 சடலமாக மீட்கப்பட்டார்.

மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர்.

இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews