கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயண தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதான 10 பேரும்... Read more »

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த 16... Read more »

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபரை கைது செய்ததாகவும்... Read more »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்,  சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 01.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்து  யாழ்ப்பாணம்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிசாருக்கு... Read more »

கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணலகழ்வு – சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரதேச செயலாளர்.

கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணலகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். குறித்த பகுதியில் மணல் மாபியாக்களால் கனரக வாகனம் கொண்டு அச்சம் இல்லாது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... Read more »

தொடரும் காவல்துறை கைதுகள் – இன்றும் 900 பேர்வரை கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 878 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 649 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 229 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு... Read more »

மின் இணைப்பு பெறவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

புதிய மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மின்சார சபையிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார். மின்சார சபையின் எஞ்சிய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு... Read more »

ஜனவரியில் மாத்திரம் 136 பேர் உயிரிழப்பு…!

2024 ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மட்டுமே 136 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காலப்பகுதிக்குள் 1,189 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 130 பாரிய விபத்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 2023ம் ஆண்டில் 22,804... Read more »

நாடு முழுவதும் மூடப்படும் மதுபான சாலைகள்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் இலங்கையின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 3 ஆம் திகதி இரவிலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வரை அனைத்து... Read more »