இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த 16 மாதங்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews