தாயை கொலை செய்த மகனால் பரபரப்பு

கம்பளை – ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர் எனவும் அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது... Read more »

வவுனியாவில் கடும் பனி  – ஒளியைப் பாய்ச்சியபடி செல்லும் வாகனங்கள்

வவுனியாவில் இன்று (07.01.2024) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச்... Read more »

வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலை சீர்குலைக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒழிக்கும் நோக்கில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு யுக்திய சுற்றிவளைப்பினை இடைவிடாத... Read more »

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக கட்டடத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மணல், சீமெந்து, இரும்பு, கம்பி, மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.... Read more »

கண்ணீருடன் விடைபெற்றார் வார்னர்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரம் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போட்டியின்... Read more »

தலைவர் பிரபாகரனை போன்று தமிழ் தேசியத்தை உலகறிய செய்வேன்

தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம்... Read more »

படுகொலை செய்யப்பட்ட அருட்சகோதரிக்கு நினைவேந்தல்

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும், உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்தும்,பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி... Read more »

சர்வதேசத்தில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அகிலத்திருநாயகிக்கு நினைவு சின்னம் வழங்கி ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அத்துடன்... Read more »

காந்தலிங்கம்-அண்ணாமலை நடாத்திய ஊடக மாநாடு

வடமாகாண கடற்றொழிளாளர் இணையத்தினுடைய ஊடகபேச்சாளர் காந்தலிங்கம் அண்ணாமலை இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more »

சிறைக் கைதிகள் ஐவருக்கு ஏற்பட்ட நிலை

காலி சிறைச்சாலை கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி... Read more »