நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், இந்த மாதத்தின் கடந்த 10 நாள்களில் மாத்திரம் 67 ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின்... Read more »
திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் ... Read more »
கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மண்முனை தென்மேற்கு... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் நேற்றைய தினம்(14) ... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேன்துறை கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இவர்கள் தமிழ்நாடு மாநிலம் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம்... Read more »
சிறீலங்காவின் தொல் பொருளியல் திணைக்களமானது இத்தீவில் ஆரிய வம்சத்தினராகிய சிங்கள பௌத்தர்களே ஆதிக் குடிகள் என்பதாக நிறுவுவதை மட்டுமே தனது (அனைவருக்கும் தெரிந்த) இரகசிய வேலைத்திட்டமாக (Projects) வரித்துள்ளது. என தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும்... Read more »
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி... Read more »
இன்று, முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில் சட்டவிரேதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடாத்தி பிடித்தனர். பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடாத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் அந்த வீதியால் வந்துள்ளது. பொலிசார் குறித்த... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு அண்மை நாட்களாக நிலவி வரும் சூழலில் வடமராட்சி அம்பன் பகுதியில் இரத்ததான முகாம் ஒன்று இன்று(15) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”என்ற தொனிப் பொருளில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை மருதங்கேணி பிரிவினரால்... Read more »
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி விரைவில் நிறைவடையுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே, அமைச்சின் செயலாளர் வியனி குணதிலக இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள... Read more »