கல்வி அமைச்சின் செயலாளர் சிலரை பாதுகாத்ததன்  விளைவே அதிபர்கள் இடமாற்ற பின்னடிப்புக்கு காரணம்.. ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு….!

வடக்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில்  சிலரை வெளி மாவட்டம் செல்லாது பாதுகாக்க  கல்வி அமைச்சின் செயலாளர் எடுத்த முடிவே ஏனைய அதிபர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க  செல்லாமைக்கான காரணம் என தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன்... Read more »

இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலை இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட  முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள்……!

இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலையை இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட  முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகாசபை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »

புலோலியூர் தமிழ்  அறிஞர்களில்   ஒருவரான தமிழ்த் தாத்தா கந்த  முருகேசனாரின் 57ஆவது நினைவு தினம்

புலோலியூர் தமிழ்  அறிஞர்களில்   ஒருவரான தமிழ்த் தாத்தா கந்த  முருகேசனாரின் 57ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை நினைவு கூரப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் மந்திகைச் சந்தியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு சிலையை நிறுவிய புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரால்  அஞ்சலி  நிகழ்வு நடத்தப்பட்டன.... Read more »

வீசிய கடும் காற்றினால் ஈச்சிலம் பற்று பிரதேச செயலர் பிரிவில் 29 வீடுகளும் 30க்கும் மேற்பட்ட படகுகளும் சேதம்….!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் சீனன்வெளி ஆகிய கிராமங்களில் இன்று மாலை 4.30மணியளவில் சிறிய அளவிலான சூறாவளிக் காற்றின் காரணமாக 29வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் உந்துருளி ஒன்றும் சேதமடைந்துள்ளது. பாரிய இரைச்சலுடன் சூறாவளித் தாக்கம் ஆரம்பித்த... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில்  எரிபொருளுக்காக இன்றும்  மிக நீண்ட வரிசை.

கிளிநொச்சி மாவட்டத்தில்  எரிபொருளுக்காக இன்றும்  மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருள் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும்  கிளிநொச்சியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல்  பெற்றுக் கொள்வதற்காக தங்களுடைய வாகனங்களுடன் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து... Read more »

காணி கொள்ளையை நிறுத்துவோம் : இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம்….! பொது அமைப்புக்கள்.

காணி கொள்ளையை நிறுத்துவோம், இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம் என வட மாகாண பெண்கள் குரல் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கையானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச்செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச்செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. Read more »

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பெஸ்ட் ஒப் யங் சமூக நிறுவனத்தின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாணவர் மகிமை எனும் வேலைத்திட்டத்தின்... Read more »

சமூக மட்ட அமைப்புகளுடனான ஒரு நாள் செயலமர்வு.

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் மீளிணக்கம் பொறுப்புக்கூறல் ,மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பாக சமூக மட்ட அமைப்புகளுடனான ஒரு நாள் செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது . கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் இடம்பெற்ற... Read more »

மட்டு.தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய தீமிதிப்பு.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு தாண்டவன்வெளி, ஏரன்ஸ் வீதி, வாழ் மக்களால் பத்தாம் நாள் சடங்கு உற்சவததினை சிறப்பிக்கும் வகையில் குருந்தையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீ குழிக்கான தீக்கட்டை மற்றும் மடப்பெட்டிகள் உள்ளிட்ட பூசைப் பொருட்கள்... Read more »