பெண்களின் வாழ்வாதார தொழில் முயற்சியை ஊக்குவிக்க நடவடிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையினால் பெண்களின் வாழ்வதார தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது காத்தான்குடி நகர சபையும் அய்க்கா நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான உணவுப் பதார்த்தாங்கள தயாரித்து போத்தலில் அடைக்கும் பயிற்சி செயலமர்வொன்று இன்று காத்தான்குடி நகர சபையின் பொது... Read more »

அரிசி களஞ்சியசாலை,வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் அரிசி களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில் அம்பாறை தலைமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்த நுகர்வோர் அலுவல்கள்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமருக்கு கடிதம்.

தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற... Read more »

மடடு. புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் பெருவிழா நிறைவு.

மட்டக்களப்பு – புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 222 வது வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை திருத்தல நிருவாகக் குரு அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளார் தலைமையில்... Read more »

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகார வழக்கு.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க... Read more »

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்துச் சம்பவம்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற காரொன்று கல்லடி சாந்தி படமாளிகைக்கு முன்னால் வேகத்தைக் கட்டுப்படுத்த... Read more »

தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாதென இராணுவம் வடகிழக்கில் குவிப்பு:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டாது என கூறி... Read more »

80 வீத மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்பு – சுட்டிக்காட்டுகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம்!

இலங்கையில் வாழும் ஏழ்மையான 40வீதமான குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ. 26,931 ஆகும். இதனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்த குடும்பங்கள் மூன்று வேளை உணவை கற்பனையில்கூட காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்... Read more »

சமூகப் பாதுகாப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் – மிச்செல் பச்லெட்!

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள்... Read more »

பாஷையூர் அந்தோனியார் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் மதவேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்... Read more »