நீண்ட நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் இன்று ஆரம்பம்…..!

நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலை கற்றல் செயற்பாகள் ஆரம்பமாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், இன்று மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு செய்கின்றனர். Read more »

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் –

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவைகளும் இன்று முடக்கம்..!

எரிபொருள் பெறுவதில் தொடரும் நெருக்கடி நிலையினால் யாழ்.மாவட்ட தனியார் பேருந்துகள் (உள்ளுர் – வெளியூர்) இன்று  சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்.மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் பேச்சுவார்த்தை... Read more »

படகிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு! காயமடைந்தவர் மரணம், உறவினர்கள் போராட்டம்… |

யாழ் நயினாதீவு இறங்குதுறை பகுதியில் தவறி விழுந்து படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் வைத்தியசாலை முன்பாக கூடியதால் பதற்றம் நிலவி வருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நயினாதீவு... Read more »

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச ஊடாக நிர்ணய அளவுக்கும் அதிகமான டீசல் விநியோகம்! புகுந்து விளையாடும் அரசியல்… |

இ.போ.ச வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது முறைகேடாக அதிகளவு டீசல் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கும், அரச... Read more »

எரிபொருள் வரிசையில் இரு தரப்பினர் இடையில் முறுகல்..! 7 பேரை கைது செய்தனர் பொலிஸார்… |

எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் வரிசையை குழப்பியோருக்கும் இடையில் உருவான முறுகல் சம்பவத்தை தொடர்ந்து 7 பேரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் வவுனியா – வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக... Read more »

தேசிய அடையாள அட்டை நடைமுறை நாடு முழுவதும் அமுல்! அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு… |

தேசிய எரிபொருள் அட்டையின் QR முறைமை இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வாகன பதிவெண் அடிப்படையில் நேற்று எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும்... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய வெளிநாட்டு அமைப்பு முஸ்தீபு..!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்யக்கோரி தென்னாபிரிக்க அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அவரின் செயற்பாடுகள் குறித்த இதில் குற்றம்... Read more »

இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... Read more »

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

அனுராதபுரம் மிஹிந்தலை காட்டு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் மிஹிந்தலை காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்,... Read more »