தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச ஊடாக நிர்ணய அளவுக்கும் அதிகமான டீசல் விநியோகம்! புகுந்து விளையாடும் அரசியல்… |

இ.போ.ச வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது முறைகேடாக அதிகளவு டீசல் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கும்,

அரச பேருந்துகளுக்குமான டீசல் விநியோகம் இடம்பெற்று வருகிறது. தனியார் பேருந்துகளுக்கு 100 லிட்டருக்கு உட்பட்டு டீசல் விநியோகம் இடம்பெற வேண்டும் என சுற்றுநிருபங்கள் தெரிவிக்கின்ற நிலையில்

150 லீட்டர் வரை டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் அரச கட்சியின் ஏழு சாலைகளின் இணைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவிக்கின்றன

Recommended For You

About the Author: Editor Elukainews