வெலிக்கடை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல்….!

1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 25,27 திகதிகளில் சிங்கள காடையர்களால் வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் மற்றும் போராளிகள், பொது மக்கள் என 53... Read more »

நாடாளுமன்றின் அவைத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமனம்.

நாடாளுமன்றின் அவைத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நாடாளுமன்றில் பதவி நிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அவைத் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தன கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை... Read more »

சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் உதவிகள்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல்.

சீனாவிடம் இருந்து மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேலும் இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் ஜூலை 16 மற்றும் 19 ஆம்... Read more »

கொழும்பில் வெடித்தது மற்றுமொரு போராட்டம்! கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பு  ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.  கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  அவசரகாலச் சட்டத்தை சுருட்டிக்கொள், போராட்டத்திற்கு  எதிரான அடக்குமுறையை நிறுத்து என்னும் தொனிப்பொருளில் இந்த... Read more »

முள்ளியவளையில் வாள்வெட்டாக மாறிய வாய்த்தர்க்கம்: ஒருவர் பலி.

முல்லைத்தீவு – முள்ளியவளை தெற்கு பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் முள்ளியவளை தெற்கினை சேர்ந்த குடும்பஸ்தரான பெருமாள் சதீஸ்வரன் (32 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்... Read more »

மட்டு.நகரில் இடர்கால நிவாரண உலருணவு வழங்கும் நிகழ்வு.

இடர்கால நிவாரண உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் தேவையுடைய மக்களுக்கு உணவளிப்பதற்கான ஓர் மனிதாபிமான முயற்சி எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில்... Read more »

மட்டு.அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 தேர்த்திருவிழா.

வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 ஆண்டு ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ கோலாகலமாக இடம்பெற்றது. இராம பிரான் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாகவும் மூல மூர்த்தி,தீர்த்ததலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டமைந்துள்ள... Read more »

மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பெருமான் புகழ் இறுவெட்டு வெளியீடு.

கிழக்கிலங்கையில் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 ஆண்டு; ஆடி அமாவாசை மஹோற்சவ பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் ‘ஆடி அமாவாசை திருவிழா ‘ எனும் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பெருமானின் சிறப்பினை வெளிப்படுத்தும் பிள்ளையார்... Read more »

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசலை ஊழியர்கள் தமக்கு நேர்த்தியான நடவடிக்கையின் கீழ் பெற்றோலை விநியோகிக்குமாறு வலியுறுத்தி நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படவில்லை என்பதுடன் வெள்ளிக் கிழமைகளில் சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கு பெற்றேல் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தும் சாய்ந்தமருது... Read more »

சிசு கொலை – வைத்தியர் கைது.

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவத்தில் நேற்று மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட... Read more »