எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய... Read more »

டீசல் விநியோகத்திற்கு இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து முகாமையாளர் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால்  (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்துக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் பேருந்து உரிமையாளரிடம் வாங்கிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தனியார் பேருந்துகளுக்கு... Read more »

நாட்டை சூறையாடியவர்களை அப்புறப்படுத்தியவர்கள் அடக்குமுறைக்கு உட்படுவதை தடுக்க மக்கள் முன்வர வேண்டும்….! எம் ஏ சுமந்திரன்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சசுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் (28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாட்டில் இன்று... Read more »

கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதாக பரவும் தகவல்!சித்தார்த்தன் விளக்கம்,

ஆறு,ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகிறது. ஆனால் பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டதில்லை. கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும் வாக்களிக்கவில்லை என புளொட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார். சமகால... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாக அதன் தலைமை பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas தெரிவித்துள்ளார்.... Read more »

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்! நாட்டை விட்டு வெளியேற சிக்கல்.

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல் ரேகையின் உரிமையாளர்கள்  நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ... Read more »

மாலைதீவு சபாநாயகர் நஷீத்தின் சகோதரர் கைது

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தனது சகோதரரைக் கைது செய்துள்ளதாக முகமது நஷீத் குற்றம்... Read more »

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை.

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை இன்று  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றை 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த உப்புவெளி... Read more »

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அரசியலமைப்பின் படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... Read more »

இலங்கையின் கடன் நிபந்தனை தொடர்பில் வெளியான தரப்படுத்தல்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வெற்றிகரமானஅரசாங்கம் ஒன்று அமைவதே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒருமுக்கியமான முன்நிபந்தனையாக இருக்கும் என்று ஃபிட்ச் தரப்படுத்தல் குறிகாட்டிதெரிவித்துள்ளது. எனினும், நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பை... Read more »