விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்! நாட்டை விட்டு வெளியேற சிக்கல்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல் ரேகையின் உரிமையாளர்கள்  நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

இதேவேளை, போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது எனவும், அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது என்றும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும்,வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது, அதுமட்டுமல்லாது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாதென தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews