வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற சாாரதி. முச்சக்கர வண்டி விபத்து……!

வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கட்டுப்பாட்டை இழந்து தனியார் கல்வி நிலைய வளாகத்திற்குள் புகுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 8.35 மணியளவில் வடமராட்சி மாலைசந்தை  சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ... Read more »

மருதங்கேணி கோட்டத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி  வலயத்திற்கு உட்பட்ட மருதங்கேணி கோட்ட 2020, ,2021ம் ஆண்டுகளுக்கான  சாதனையாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வு லதா அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் நேற்று காலை 9:30 மணியளவில் யா.தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலை கேட்போர் கூடத்தில் மருதங்கேணி கோட்ட பாடசாலை அதிபர் சங்க... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் நேற்று 10.08.2022  காலை 10 மணியளவில் இடம்பெற்றது, முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு... Read more »

 களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்ப்பு….!

கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07.08.2022 அன்றைய தினம் இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவுயிந்திரம் காணாமல் போயுள்ளது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »

சுமார் 1 கோடியே 20 லட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் கணவன், மனைவி விமான நிலையத்தில் கைது!

சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதிகள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள்... Read more »

எரிவாயு விநியோகத்திற்க்கும் மாவட்ட செயலகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை….! க.மகேசன்

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 சமையல் எரிவாயு சிலின்டர்களில் 1000 சிலின்டர்கள் மாவட்டச் செயலக ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு பகிரப்பட்ட சம்பவத்திற்கும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை... Read more »

காரைநகரில் வன்முறை கும்பலால் வீடு ஒன்று தீக்கிரை!

காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினர்ஒருவரின் வீடு 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக அடாவடி கும்பல் ஒன்று காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் நிரப்ப விடாது குழப்பத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில்... Read more »

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி உயிர்மாய்ப்பு!

யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மூன்றாவது... Read more »

2000 நாட்களை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2000 நாட்களை எட்டுகின்ற நிலையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற... Read more »

யாழில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞரொருவர் கைது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருட்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய்... Read more »