சுமார் 1 கோடியே 20 லட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் கணவன், மனைவி விமான நிலையத்தில் கைது!

சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதிகள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து வருகை தந்துள்ளனர். 

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையே நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews