வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற சாாரதி. முச்சக்கர வண்டி விபத்து……!

வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கட்டுப்பாட்டை இழந்து தனியார் கல்வி நிலைய வளாகத்திற்குள் புகுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.35 மணியளவில் வடமராட்சி மாலைசந்தை  சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில்  படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் கரணவாய் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாம்பழம் மகேந்திரன் (வயது 50) என்பவரே படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உடல் சுகயீனம் காரணமாக ஒருவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணித்துக் கொண்டிருந்த போது

மாடு குறுக்கே சென்றுள்ளது. இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதி வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews