புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி... Read more »

கல்வி கூட்டுறவுச்சங்கத்தின் பணிப்பாளர் சபையை உடனடியாக கூட்டுமாறும், பணிப்பாளர் சபைக்குரிய தேர்தலை உடனடியாக​ நடாத்துமாறும் போராட்டம்

கல்வி கூட்டுறவுச்சங்கத்தின் பணிப்பாளர் சபையை உடனடியாக கூட்டுமாறும், பணிப்பாளர் சபைக்குரிய தேர்தலை உடனடியாக​ நடாத்துமாறும் கோரி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் கிளிநொச்சியில் உள்ள வடமாகாண​ கல்வி கூட்டுறவுச் சங்கங்க காரியாலயம்​ முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்... Read more »

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் – எஸ் சிறிதரன்….!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் இன்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி... Read more »

மஹிந்த – கோட்டாவிற்கு தடை : கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள்... Read more »

பாடசாலை மதிய உணவில் பாம்பு: 30 மாணவர்கள் வைத்தியசாலையில்!

இந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தின் மயூரேஸ்வர் பகுதியில் ஆரம்பப்பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பாடசாலையில் நேற்றுமுன்தினம்... Read more »

தொண்டைமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம்... Read more »

யாழில் கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதுடன் கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர... Read more »

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (10) மாலை மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். செட்டிகுளம் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 6 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் பிரிந்து போட்டியிடக் கூடாது…! தமிழ் உணர்வாளர் அமைப்பு எச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்... Read more »

14 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தரங்க மஹரத்ன முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர்... Read more »