யாழில் கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதுடன் கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் இடம்பெறுகின்ற முன்னேற்பாடு குழு கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை 25 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாக இடம் பெறுகின்றது.

பெப்ரவரி மாதம் 11 ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 25 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் நேற்று(10.01.2023) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முன்னேற்பாட்டு குழு கூட்டத்தில் முப்படைகளின் பிரதிநிதிகள் துறை சார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews