மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்பட்ட , பாடசாலை மாணவன் உட்பட நான்கு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் போதைப்பொருள்... Read more »
பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழி வகை... Read more »
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர்... Read more »
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவர்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு... Read more »
ஹோமாகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் தந்தை ஒருவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ஹோமாகம, வடக்கு பிட்டிபன, ஹெட்டிகொடவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தோமஸ் திஸாநாயக்க கலன... Read more »
உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைகள் ஆணையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்போர், குறித்த திகதிக்கு முன்னதாக இணையவழி ஊடாக விண்ணப்பங்களை... Read more »
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிகப்பட்டுள்ளது. 12.5 கிலோ எடை எரிவாயுவின் விலை 250 ரூபாயால் அதிகரித்து 4 ஆயிரத்து 610 ரூபாயாகவும் 5 கிலோ எடை எரிவாயுவின் விலை 100 ரூபாயால் உயர்ந்து ஆயிரத்து 850 ரூபாயாகவும்... Read more »
இன்று பிற்பகல் 3 மணி வரை அமுலிலிருக்கும் வகையில் மீனவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில்... Read more »
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை அதிபர் நிதியம் ஆரம்பித்துள்ளது. அதிபர் ரணில்... Read more »
அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05.11.2022) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவபெற்றவுடன்... Read more »