திருகோணமலை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட... Read more »

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் – மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணியில் இருந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என மல்லாகம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் வீதிமறியல் போடப்பட்டது. ஆகையால்... Read more »

திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை தி/புனித மரியாள் கல்லூரியில் திறந்து வைப்பு….!

வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊடாக தேவ் – லலிதா மகாதேவன் (அவுஸ்திரேலியா) அவர்கள் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தால் திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை தி/புனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. பசுமை வகுப்பறை என்பது நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு... Read more »

காத்தான்குடியில் மதுபான கசிப்பு வியாபாரம் உழவு இயந்திரத்தில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற வெவ்வேறு சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாற்குடாவில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஆண் ஒருவர் உட்பட இருவரையும் மற்றும் காத்தான்குடியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் ஒருவர் உட்பட வெவ்வேறு சம்பவங்களில் இன்று வியாழக்கிழமை (04) 3... Read more »

அம்பாறை தமணவில் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சாஜன் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது!

அம்பாறை  தமண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழுவின் புலன்விசாரணை அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (3) மாலை வரிப்பொத்தான்சேனை பிரதேசத்தில் வைத்து  கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி... Read more »

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் வேலணை ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, வேலணை பகுதியில் பல்வேறு உதவி

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் வேலணை ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, வேலணை பகுதியில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன. அந்தவகையில் இன்றயய தினம் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், வேலணை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா பெட்டிகள்,... Read more »

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ்... Read more »

யாழ்ப்பாணத்தில் கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம்(video)

யாழ்ப்பாணத்தில் கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம்  இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளகடமிருந்து வாழைக்குலைககள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைச்சின் கீழ் உள்ள... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் ஊடகவியலாளர்கள் போராட்டம்….!

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்... Read more »

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யபடும்போதும் பேனாவுடனே அலைந்தோம் ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடவேண்டும்….!குமாரசாமி செல்வகுமார்

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யபடும்போதும் பேனாவுடனே அலைந்தோம் ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடவேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்  ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கருத்து... Read more »